இலங்கை

கொழும்பில் கூரிய ஆயுத்ததால் தாக்கப்பட்டு 17 வயது சிறுவன் கொலை!

கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (25) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெஹரகொடெல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினருக்கு இடையே நிலவிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த நபர் வீட்டில் இருந்த போது கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், உயிரிழந்தவர்களுடன் இருந்த குழுவினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இக்கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொலையுடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களை 02 வாள்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மன்னா கத்தியுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31, 32 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிரேன்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!