தரையிறங்கும்போது தீப்பற்றிய ரஷ்ய விமானம் – பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்

ரஷ்யாவின் Azimuth ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியின் அன்டால்யா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமான இயந்திம் தீப்பற்றியததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
விமானத்தில் இருந்த 90க்கும் அதிகமான பயணிகளும் விமானிகளும் வெளியேற்றப்பட்டனர்.
அது ரஷ்யாவின் சொச்சி நகரிலிருந்து துருக்கியின் அன்டால்யா நகருக்கு வந்து கொண்டிருந்தது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
அதிகாலை மூன்று மணி வரை அன்டால்யா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ராணுவ விமான நிலையத்தைத் தற்காலிகமாகப் பயன்படுத்தின.
விமானத்தின் இடது பக்க இயந்திரம் தீப்பற்றியதாகவும் அது உடனே அணைக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரி கூறினார்.
(Visited 10 times, 1 visits today)