பொழுதுபோக்கு

“அஜித்துக்கு ஆண்மை இருக்கானு சந்தேகமா இருக்கு” இப்படி சொன்னவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கும், அஜித் குமார் பற்றி பத்திரிகையாளர் பாண்டியன் பேட்டி ஒன்றில் பகிர்ந்த விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.

கோலிவுட் திரையுலகில், ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பே 1990ஆம் ஆண்டு, ‘என் வீடு என் கணவர்’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அஜித்.

இதை தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஆனால் இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற வில்லை. இதை தொடர்ந்து அஜித் நடித்த பவித்ரா, ராஜாவின் பார்வையில், போன்ற படங்கள் அடுத்தடுத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

தன்னால் யாருக்கும் நஷ்டம் ஏற்பட கூடாது என்பதை மனதில் வைத்து கொண்டு, திரை உலகை விட்டு விலகலாம் என்கிற முடிவில் அஜித் இருந்த போது தான், இயக்குனர் வசந்த் இயக்கத்தில் மணிரத்தினம் தயாரித்த ‘ஆசை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

கடைசியாக இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விடலாம் என அஜித் முடிவு செய்த நிலையில், ‘ஆசை’ படத்தின் வெற்றி அஜித்தின் முடிவையே மாற்றியது. ஆசை படத்திற்கு பின்னர் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நாயகனாக மாறினார்.

பின்னர் பானுமதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை என தொடர்ந்து காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த அஜித்துக்கு, ‘காதல் கோட்டை’ பிளாக் பாஸ்டர் வெற்றியை கொடுத்தது. திரையரங்கில் சுமார் 100 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடியது மட்டும் இன்றி, சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், ஆக்ஷன் கதைக்களத்தில் அஜித் ஆர்வம் காட்ட துவங்கினார்.

மேலும் வாலி, அமர்க்களம், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, ராஜா, வில்லன், பில்லா 2, போன்ற படங்கள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் படங்களாக உள்ளன.

இந்நிலையில் அஜித் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவருக்கு உதவி செய்த தகவலை பத்திரிகையாளர் பாண்டியன் தற்போது கூறியுள்ளார். அதாவது அஜித்துக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும், குழந்தை பிறக்காத நிலையில்… திரைச்சுவை என்கிற பத்திரிக்கை, அஜித் காதலித்து திருமணம் பண்ணிக்கிட்டாரு, ஆனால் இரண்டு மூன்று வருடமாக குழந்தையை இல்ல? அவருக்கு ஆண்மை இருக்கானு சந்தேகமா இருக்குதுன்னு எழுதி, அசிங்கப்படுத்தி இருந்தார்.

சில வருடங்களுக்கு பின் இந்த செய்தியை எழுதிய பத்திரிக்கையாளர் விஜயா மருத்துவமனையில் ஹார்ட் அட்டாக் காரணமாக அட்மிட் ஆகி, 2.5 லட்சம் ரூபாய் ஆபரேஷனுக்கு கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, இதுகுறித்து அறிந்த அஜித்… உடனடியாக அங்கு விரைந்து வந்து, அந்த பணத்தை கட்டி உள்ளார்.

அப்போது அவரிடம் PRO எதுக்கு சார் என்பது போல் கேட்க, “அஜித் இந்த நேரத்தில் நாம் அவரை பழிவாங்க கூடாது. வலுவாக இருக்கும்போது நாம் சண்டை பிடிக்கலாம். ஒரு நிருபர் வலுவிழந்து ஹாஸ்பிடலில் போராடிக் கொண்டிருக்கிறார். அப்போ போய் நாம ஈகோ பார்த்துகிட்டு நிக்க கூடாது என்று சொல்லி உள்ளார். இந்த தகவலை தான் தற்போது பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறியுள்ள நிலையில் அது வைரல் ஆகி வருகிறது.

(Visited 25 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்