ஆஸ்திரேலியா

சிட்னி கடற்கரைகளில் காணப்பட்ட மர்மப் பந்துகள் – சோதனையில் வெளிவந்த தகவல்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கடற்கரைகளில் அண்மையில் மர்மப பந்துகள் சில கண்டுபிடிக்கப்பட்டடது.

மர்மப் பந்துகளில் மலம், முடி, உணவுக் கழிவுகள் போன்ற அருவருப்பூட்டும் பல பொருள்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

சென்ற மாதம் 2024) ஆயிரக்கணக்கான, அசுத்தமான கருமைநிறப் பந்துகள் சில கடற்கரைகளில் கரையொதுங்கின.

அந்த மர்மப் பந்துகளைத் தொடுவதைத் தவிர்க்குமாறு நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆணையம் சிட்னி குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டது.

அவற்றை அப்புறப்படுத்துவதற்காக 7 கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

அந்த மர்மப் பந்துகள் என்ன, அவை எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறிய பல சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“அந்தப் பந்துகளிலிருந்து வந்த துர்நாற்றம் மிக மோசமாக இருந்தது,” என்று ஆணையத்தின் ஆராய்ச்சியாளர் கூறியிருந்தார்.

(Visited 36 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!