மத்திய கிழக்கு

லெபனான் மீதான வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி மரணம்: இஸ்ரேல் தகவல்

தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த தீவிரவாத குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக லெபானினிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலின் வடக்கு பகுதிமீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2 மாதங்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தெற்கு லெபனானின் பராச்சிட் பகுதிக்கான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி அபு அலி ரிடா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எப்போது கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்படவில்லை

(Visited 42 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!