செய்தி பொழுதுபோக்கு

கன்னட சினிமா இயக்குனர் மற்றும் நடிகர் குருபிரசாத் தற்கொலை

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது 52). இவர், கன்னட திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார்.

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டாடா நியூ கெவன் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 1½ ஆண்டுகளாக இயக்குனர் குருபிரசாத் தங்கி இருந்தார்.

அவர் தனது முதல் மனைவியை பிரிந்து விட்டார். 2வதாக சுமித்ரா என்பவரை திருமணம் செய்து அடுக்குமாடி குடியிருப்பில் குருபிரசாத் வசித்து வந்தார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக குருபிரசாத் வெளியே நடமாடவில்லை. வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியதால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து பார்த்ததில், குருபிரசாத் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குருபிரசாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!