பொழுதுபோக்கு

அமரன் அடித்த சிக்ஸர்… சிவகார்த்திகேயனின் சம்பளம் கிடுகிடு என உயர்வு

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமரன். கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். படமானது அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகி மெகா ஹிட்டடித்திருக்கிறது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ். இந்தச் சூழலில் எஸ்கே குறித்து புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.

மேலும் படம் வெளியாகி மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். இதனால் விஜய் கொடுத்த துப்பாக்கி எஸ்கேவுக்கு பலிக்க ஆரம்பித்துவிட்டது. இனி தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி கண்டிப்பாக சிவகார்த்திகேயன் மட்டும்தான் என்று அடித்து கூறுகிறார்கள் அவரது ரசிகர்கள்.

இந்தச் சூழலில் அமரன் படத்தை முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கிறார். அதை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கிறார்.

இவைகளை முடித்துவிட்டு சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு படத்தில் எஸ்கேதான் நடிக்கவிருக்கிறார் என்று கடந்த சில காலமாகவே ஒரு தகவல் போய்க்கொண்டிருக்கிறது. சுதா கொங்கரா படத்தை இயக்குகிறார்.

அதேசமயம் சுதாவும் எஸ்கேவும் சேர்வது உறுதிதான் ஆனால் அது புறநானூறு படமா இல்லை எழுத்தாளர் நரன் எழுதிய கதையை சுதா இயக்கவிருக்கும் அந்தப் படமா என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால் அந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படமாக அமையவிருக்கிறது. இந்நிலையில் அமரன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சுதா கொங்கரா இயக்கவிருக்கும் அந்தப் படத்துக்கு எஸ்கே 40 கோடி ரூபாய்வரை சம்பளம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது.

(Visited 102 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!