இலங்கை

இலங்கை – கெசல்கமுவ ஒயாவில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ, பொகவானை பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவானை தோட்ட பகுதியில் உப மின் நிலையத்தின் அருகாமையில் உள்ள ஓயவில் சடலம் ஒன்று தலைகீழாக மிதந்து கொண்டிருப்பதை கால் நடைகளுக்கு புல் அறுக்க சென்ற நபர் ஒருவரினால் குறித்த சடலம் மிதந்து கொண்டிருப்பதை இனங்கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையா அல்லது கொலையா என பல கோணங்களில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளது பொலிஸார், உயிரிழந்தவர் 35 மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!