இலங்கை செய்தி

நீதிபதிக்கு சேறு பூசும் சுவரொட்டி: ரங்காவை கைது செய்ய உத்தரவு

சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் மிஹாலுக்கு எதிராக, சேறு பூசும் வகையிலான சுவரொட்டிகள் கொழும்பில் ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் ஒருவரை கைது செய்தனர்.

இந்த சுவரொட்டிகளை ஒட்டுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, கூறினார் என, அவர், பொலிஸாருக்கு வாக்குமூலமளித்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் ரங்காவை கைது செய்ய கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸார் ரங்காவின் வீட்டுக்கு சென்றபோதும் அங்கு அவர் இருக்கவில்லை.

இதனால், உடனடியாக அவரை தேடிக்கண்டுபிடித்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, ​திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.

(Visited 2 times, 2 visits today)
See also  பிரான்சில் புலம்பெயர்ந்தோர் படகு விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை மரணம் - 65 பேர் மீட்பு
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content