செய்தி

ஏர் இந்தியா விமானங்களில் செல்ல வேண்டாம்; பயணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தானி பயங்கரவாதி

வரும் நவம்பர் 1 முதல் 19ஆம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அக்குறிப்பிட்ட நாள்களில் ஏர் இந்தியா விமானம் ஒன்றின்மீது தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாகக் கூறியிருப்பதாக ‘இந்தியா டுடே’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்குமுன் இதே காலகட்டத்தில்தான் சீக்கிய இனப் படுகொலை நிகழ்ந்தது.

‘நீதிக்கான சீக்கியர்கள்’ (எஸ்எஃப்ஜே) அமைப்பின் நிறுவனரான பன்னுன், இந்தியாவில் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். அவர் கனடா, அமெரிக்கா என இரட்டைக் குடியுரிமை பெற்றவர்.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் அதலபாதாளத்திற்குச் சென்றுவரும் நிலையில், பன்னுனின் இம்மிரட்டல் வெளியாகி இருக்கிறது.

தன் நாட்டிலுள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளைக் குறிவைத்து இந்தியா செயல்படுகிறது என்றும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற பயங்கரவாதியின் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்புள்ளது என்றும் கனடா குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டும் இதே போன்றதொரு மிரட்டலை பன்னுன் விடுத்திருந்தார். 2023 நவம்பர் 19ஆம் திகதி டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் மூடப்படும் என்றும் அதற்கு வேறு பெயர் சூட்டப்படும் என்றும் கூறிய அவர், அந்நாளில் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தார்.

See also  இத்தாலியில் கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் - நெருக்கடியில் மக்கள்

அதேபோல, 2023 டிசம்பர் 13ஆம் திகதி அல்லது அதற்குமுன் இந்திய நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.மேலும், இவ்வாண்டு குடியரசு நாளன்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானையும் அம்மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் கௌரவ் யாதவையும் கொல்லப்போவதாக அவர் மிரட்டல் விடுத்தது நினைவுகூரத்தக்கது.

இந்திய உள்துறை அமைச்சு பன்னுன்மீது கீழறுப்பு, பிரிவினைவாதக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. அவரது ‘எஸ்எஃப்ஜே’ அமைப்பிற்கும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content