இந்தியா

இந்தியாவில் டிப்பர் சாரதியின் அதிர்ச்சி செயல் : 04 மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் மரணம்!

இந்தியாவின் கான்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பாடசாலை மாணவர்கள் உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் அதிவேகமாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த காரும் பிறிதொரு வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காரின் சாரதியும் அதில் பயணித்த 04 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கார் பலத்த சேதம் அடைந்ததால், அதில் இருந்த அனைவரும் காருக்குள் சிக்கிக் கொண்டதாகவும், இறந்தவர்களின் உடல்களைப் பெறுவதற்காக காரை வெட்டவும், கண்ணாடிகளை உடைக்கவும் நேரிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெற்ற போது டிப்பர் மற்றும் ட்ரெய்லர் சாரதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!