இலங்கை

இலங்கை: பல கோடி ரூபா பெறுமதியான காரை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட பொய்யான தகவல்களைப் பயன்படுத்தி இந்த வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது,

பறிமுதல் செய்யப்பட்ட மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப் வாகனம் பதுளை பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!