இந்தியா

இந்தியாவில் கட்டுமானத் தளத்தில் சுவர் இடிந்ததில் அறுவர் உயிரிழப்பு – தொடரும் மீட்பு பணிகள்

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்துக்கு அருகில் கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்து ஆறு பேர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காடி என்ற இடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நிலத்துக்கு அடியில் தொட்டி அமைப்பதற்காக ஊழியர்கள் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மண்சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

சனிக்கிழமை (அக்டோபர் 12) பிற்பகல் இச்சம்பவம் நடந்ததாகவும் ஒன்பது அல்லது பத்துப் பேர் மண்ணில் புதையுண்டிருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

அவர்களில் ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 19 வயது இளையர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.இன்னும் இரண்டு அல்லது மூன்று பேர் உள்ளே சிக்கியிருப்பதாக அந்த இளையர் கூறினார்.

மீட்புப் பணிகள் தொடர்வதாகக் கூறப்பட்டது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே