இலங்கையில் பொதுத் தேர்தலை கண்காணிக்க 8 நாடுகளில் இருந்து களமிறங்கும் பிரதிநிதிகள்
இலங்கையில் பொதுத் தேர்தல் கண்காணிப்பிற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவிக்கின்றது.
சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கூறினார்.
பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளனர்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயமைப்பின் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளனர்.
(Visited 6 times, 6 visits today)