இலங்கை செய்தி

திருடர்களுக்கு கைவிலங்கு போடும் இறுதி மணித்தியாலங்கள்

திருடர்களை பிடித்து விட்டீர்களா என வாய்ச் சவடால் விடுபவர்களுக்கு கூறுகிறேன் நாங்கள் கடந்து கொண்டிருப்பது திருடர்களுக்கு கை விளங்க போடும் இறுதி மணித்தியாலங்கள் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறோம் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்

திருடர்களை பிடித்து விட்டீர்களா என்று சிலர் நையாண்டியாக பேசுகிறார்கள்.

திருடர்களைப் பிடிக்க எமக்கு வரம் கிடைத்துள்ளதால் மண்சட்டி கடைக்குள் புகுந்த கிடாமாட்டைப் போன்று நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ராஜபக்ஷாக்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் இந்த நாட்டில் இருக்கிறதா வெளிநாடுகளில் இருக்கிறதா? அல்லது பங்குச் சந்தையில் இருக்கிறதா? காணிகளில் இருக்கிறதா? என்பது பற்றி நாட்டு மக்களுக்கு மிக விரைவில் வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம

திருடர்களின் திருவிளையாடல்களை முடிவுக்கு கொண்டு வரும் இறுதி மணித்தியாளங்களை நாங்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறோம் எனவும் அவர் காட்டமாக பதில் அளித்துள்ளார்

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!