ஆசியா

இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகளுக்கு விடுதலை!

இலங்கையில் பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகள் 56 பேர் இன்று (06.10) வாடகை விமானம் மூலம் அந்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

முதலீட்டு வாரியம், தகவல் தொடர்பு மற்றும் தனியார்மயமாக்கலுக்கான மத்திய அமைச்சர் அப்துல் அலீம் கான் தனிப்பட்ட முறையில் அவர்களின் பயண செலவுகளை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கைதிகள் திரும்புவதற்கு வசதியாக அப்துல் அலீம் கானின் தாராள ஆதரவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி நன்றி தெரிவித்தார்.

இந்த செயல்முறை முழுவதும் ஒத்துழைத்த இலங்கை அரசாங்கத்திற்கும் உயர்ஸ்தானிகருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த பாகிஸ்தானிய பிரஜைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக, அமைச்சர் நக்வியின் அறிவுறுத்தலின்படி, உள்துறை அமைச்சகம் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை அதிகாரிகளுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 3 visits today)
See also  தென் கொரிய குடியரசின் நிரந்தர இருப்பு சாத்தியமற்றது : எச்சரிக்கும் வடகொரியா!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content