மத்திய கிழக்கு

காஸா பள்ளி, பள்ளிவாசல் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 24 பேர் உயிரிழப்பு

காஸாவில் வீடுகளிலிருந்து வெளியேருவோருக்கு அடைக்கலம் கொடுக்கும் பள்ளி, பள்ளிவாசல் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.

அச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) காலை நிகழ்ந்தது. ஹமாஸ் அமைப்பு நடத்தும் காஸா அரசாங்கத்தின் ஊடகப் பிரிவு அலுவலகம் இத்தகவல்களை வெளியிட்டது.

மத்திய காஸாவில் அல்-அக்சா மருத்துவமனைக்கு அருகே உள்ள பள்ளிவாசல், பள்ளி மீது ஆகாயத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. டெயர் அல் பலா பகுதியில் உள்ள இபுன் ரு‌ஷ்ட் பள்ளி, ‌ஷுஹாதா அல்-அக்சா பள்ளிவாசல் ஆகியவற்றில் ஹமாஸ் அமைப்பினர் இயங்கிக்கொண்டிருந்ததாகவும் அவர்களைக் குறிவைத்துத் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை குறிப்பிட்டது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு எதிர்பாரா வகையில் தென் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அதில் 1,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது.

அதற்குப் பதிலடியாக இஸ்ரேல், காஸா மீது போர் தொடுத்தது. போரில் கிட்டத்தட்ட 42,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதோடு, காஸாவில் வசித்த 2.3 மில்லியன் மக்கள் கிட்டத்தட்ட அனைவருமே வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.

(Visited 49 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.