பொழுதுபோக்கு

ஜாமீனில் வந்தவர் பிக் பாஸ் செல்கின்றார்… என்ன நடக்குமோ?

பிக் பாஸ் சீசன் 8 நாளை மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் உத்தேசப்பட்டியல் வெளியாகி உள்ளது.

இதில் தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்திர் சந்திரசேகர், திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ரவீந்தர் சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கலை நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி ரவீந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்தர் தரப்பில் புகார்தாரருக்கு ரூ.2 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள். ஆனால் புகார் அளித்த பாலாஜி இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் ரவீந்தர் அப்படி எதுவும் தரவில்லை என்று பதில் அளித்தார் இது அவருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியது.

See also  சிவகார்த்திகேயனிடம் சதீஷ் கேள்வி கேட்ட காட்சி GOAT படத்தில் நீக்கம்

இதன்பின் காவல்துறையினர் ரவீந்திரனின் வங்கிக்கணக்கை ஆராய்ந்ததில் பல வங்கி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. ஆனால் அவை அனைத்தும், இந்த வழக்கில் தொடர்புடையதா என தெரியவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, இரண்டு வாரத்திற்குள் ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தற்போது ஜாமீனில் இருக்கும் ரவீந்தர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. கடந்த முறையே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதாகவும், எனக்காக இருக்கை, மெத்தனை என அனைத்தையும் மாற்றுவதாக நிகழ்ச்சி நிர்வாகம் கூறியிருந்தது.

ஆனால், அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்போது பிக் பாஸ் சீசன் 8ல் இவர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. தனது யூடியூப் சேனலில் பிக் பாஸ் போட்டியாளர்களை கடுமையான விமர்சனம் செய்து கிழித்து தொங்கவிடும் இவர், வீட்டிற்குள் நிச்சயம் சும்மா இருக்க மாட்டார் என்றும், பாவம் விஜய் சேதுபதியின் தலை தான் உருளப்போகிறது என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

See also  வீட்டு பணியாட்கள் முன்னிலையில் ஏற்பட்ட அவமானம் - மனம திறந்தார் ஜெயம் ரவி

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content