இலங்கை ஜனாதிபதி தேர்தல் – அநுர குமாரவின் பதவியேற்பு தொடர்பில் வெளியான தகவல்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க நாளை காலை 9 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது விருப்பத்தேர்வுகள் எண்ணப்பட்டு வருகின்ற போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் எமக்கு தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அவருக்கு பல அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)





