பொழுதுபோக்கு

ஜெயம் ரவி மனைவியை பிரிய இந்த பெண் தான் காரணமா? பிரபல பத்திரிகை பரபரப்பு

பாடகி கெனிஷா பிரான்சிஸ் வரவால் தான் ஜெயம் ரவி குடும்பம் இந்த நிலைமைக்கு சென்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷ் உடனான நட்பு தான் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியை பிரித்து விட்டது என்றெல்லாம் வழக்கம் போல விவாகரத்து ஆனதுமே பழியை தனுஷ் மீது எழுதுங்க என்பது போல ஆர்த்தி ரவியையும் தனுஷையும் சமூக வலைதளத்தில் டேமேஜ் செய்ய ஆரம்பித்தனர்.

ஆனால், தனுஷை அண்ணா என்று தான் ஆர்த்தி ரவி அழைத்து வருகிறார் என்றும் ஜெயம் ரவி தான் பாடகி கெனிஷாவுடன் ஒரு மாதம் கோவாவில் இருந்துள்ளதாக நக்கீரன் பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

Deaf Frogs எனும் ஆல்பத்தை சமீபத்தில் கெனிஷா பிரான்சிஸ் பாடியிருந்தார். அந்த ஆல்பத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, ஜீவா மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்டனர். தான் ஜெயம் ரவியின் தீவிர ரசிகை என்றும் தன்னுடைய பாடலை பொன்னியின் செல்வன் நடிகர் வெளியிடப் போகிறாரா என ஷாக் ஆகி விட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கெனிஷா பிரான்சிஸ் கூறியிருந்தார்.

பாடகி கெனிஷா மற்றும் ஜெயம் ரவி கோவாவில் தங்கியிருந்ததற்கும் இருவரும் ஒரே காரை ஓட்டிச் சென்று அபராதம் கட்டிய தகவல்களும் வெளியாகி உள்ளன. கோவாவில் மட்டுமின்றி பெங்களூருவிலும் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறுகின்றனர்.

ஜெயம் ரவி கோவாவில் இருக்கும் செய்தி அறிந்து அவரை சந்திக்க ஆர்த்தி சென்ற போது கூட கெனிஷா ஆர்த்தியை அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி அவசர அவசரமாக மனைவியின் சம்மதம் இல்லாமல் அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தாமல் ஏன் திடீரென அப்படியொரு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இரு மகன்களுடன் கணவரின் பிறந்தநாளை கொண்டாடலாம் என காத்திருந்த ஆர்த்தி ரவிக்கு ஜெயம் ரவி அளித்த பரிசு அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர், இதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் ஜெயம் ரவியுடன் பேசக் கூட யாரும் அனுமதிக்கவில்லை என்றும் இனிமேல் தன்னுடைய வாழ்க்கை முழுவதுமே மகன்களுக்கான வாழ்க்கை தான் என்றும் ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து தான் இந்த விவாகரத்து மேட்டரில் ஆர்த்தி ரவி மீது எந்த தவறும் இல்லை என்றும் பாடகி கெனிஷா மீது ஜெயம் ரவி தான் காதலில் விழுந்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜெயம் ரவி என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content