இலங்கை செய்தி

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

இலங்கையில் பழைய நிகழ்வுகள் தொடர்பான காணொளிகளை மீண்டும் சமூக ஊடகங்களில் தற்போதைய நிகழ்வுகளாக பரப்பி மக்களை தவறாக வழிநடத்தும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பரவி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிக்கும் குறிப்பிட்ட வாகனங்களை பல்வேறு நபர்கள் சோதனையிடுவது, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளிகள் போன்ற பல்வேறு சூழ்நிலைகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான காணொளிகளை சமூக ஊடகங்களில் மீண்டும் பரப்புவதன் மூலம் தவறான கருத்து பரப்பப்படும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் நேரடியாக தலையிடும் வகையிலும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் காணொளிகளை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content