இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் பதிவு!

தேர்தல் தொடர்பான மொத்தம் 173 முறைப்பாடுகள் இலங்கை காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

அதில் 119 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தாக்குதல் மற்றும் தீ வைப்பு போன்ற குற்றச் செயல்கள் தொடர்பாக 54 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான வன்முறை முறைப்பாடுகள் தொடர்பில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்