மத்திய கிழக்கு

ஹமாஸ்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை – பிரதமர் நெதன்யாகு

காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தக் கொலைகள் ஹமாஸ்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்பதையே நிரூபிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் பிணைக்கைதிகள் இறப்பு செய்தியைக் கேட்டு தனது இதயமே நொறுங்கிப்போனதாக தெரிவித்தார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “ஹமாஸ் அவர்களை உறையவைத்து கொலை செய்துள்ளது. இதற்காக இஸ்ரேல் ஹமாஸ்களை கட்டாயம் பொறுப்பேற்க வைக்கும். அவர்கள் போர்நிறுத்த பேச்சுவார்த்தையை முறியடிக்கின்றனர். பிணைக் கைதிகளை கொலை செய்பவர்கள் போர்நிறுத்தத்தை விரும்பவில்லை. ஹமாஸ்கள் அழிக்கப்படும் வரை போர் தொடரும். பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ராணுவ ரீதியிலான அழுத்தம் வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஒரு இஸ்ரேல் – அமெரிக்க இளைஞர் ஹெர்ஸ் கோல்ட்பெர்க் – போலின் உட்பட ஆறு பிணைக்கைதிகளின் உடல்களை காசாவின் சுரங்கத்தில் இருந்து மீட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது. பிணைக்கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் ராணுவம் சுரங்கத்துக்குள் செல்லும் சில மணிநேரத்துக்கு முன்பாக ஆறு பேரை கொலை செய்யப்பட்டது உறுதியானது. இறந்தர்வர்கள் யார் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் ராணுவம் தெரிவித்திருந்தது.

பிணைக் கைதிகள் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பது பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பெரிய அளவிலான எதிர்ப்பினை உருவாக்கியுள்ளது. பத்து மாத போரினை முடிவுக்கு கொண்டு வரவும், பிணைக்கைதிகளை உயிருடன் மீட்கவும் நெதன்யாகு தவறி விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே இஸ்ரேலிய பிணைக்கைதிகள் சிலரின் உடல்களை காசாவில் தாங்கள் கண்டெடுத்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்த சிறிது நேரத்தில், ஹேஸ்ட்டேஜ் ஃபோரம் என்ற முக்கியமான தன்னார்வலர்கள் குழு ஒன்று, நெதன்யாகு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அக்குழுவெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நெதன்யாகு பிணைக்கைதிகளை கைவிட்டுவிட்டார். தற்போது இதுதான் நிஜம். நாளை முதல் நாடு ஸ்தம்பிக்கும். அதற்காக தயாராகுமாறு மக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!