இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு – அநுர முன்னிலை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுகாதார கொள்கை நிறுவகம் நடத்திய கருத்துக்கணிப்பின் சமீபத்திய அறிக்கையை  வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அநுர திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் செல்வாக்கு சற்று குறைந்துள்ள போதிலும், அவர்கள் இருவரும் இன்னும் முன்னணியில், அருகருகே  இருப்பதாக  கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவேக வளர்ச்சியை எட்டியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றது.

தற்போது, ​​ரணில் விக்கிரமசிங்க தனது சதவீதத்தை 23% ஆக அதிகரித்துள்ளதுடன், அனுர திஸாநாயக்க 37% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதேவேளை சஜித் பிரேமதாச 36% உடன் அவருக்கு அருகில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ 4% வாக்குகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!