ஐரோப்பா

31 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் : பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா!

உலகளாவிய ரீதியில் காய்ச்சல் உள்ளிட்ட பல தொற்றுக்கள் பரவி வருகின்ற நிலையில் பிரித்தானியா தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

இதன்படி 31 நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்குக் கூட கடுமையான காயம், மரணம், நோய், சிறையில் அடைக்கப்படுவது அல்லது பிற பயங்கரமான விளைவுகளின் ஆபத்து அதிகமாக இருக்கும் உலகின் பகுதிகளை வெளியுறவு அமைச்சகம் சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுழைவுத் தேவைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதார அபாயங்கள் உட்பட, வெளிநாட்டுப் பயணம் பற்றிய ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகளைப் பெறுமாறும் அரசாங்கத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி Belarus , Kosovo, ரஷ்யா,உக்ரைன், மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், லெபனான், பாலஸ்தீன், சிரியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, வெனிசுலா,  ஹைடி, மியன்மார், நோர்த் கொரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content