இலங்கை செய்தி

2024 ஜனாதிபதி தேர்தல் – இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பதை தொடர்பில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையின் பின்னர் தீர்மானிக்கப்படும் என இலங்கைத் தமிழ் அரசு கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (18) வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்றதுடன் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி ஆதரவளிக்க வேண்டிய ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதன் பின்னர் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

(Visited 38 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!