இலங்கை செய்தி

திருகோணமலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காவந்திஸ்ஸ புர, ஸ்ரீ புர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது மூன்று முறை டி 56 ரக துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணையை ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டுபாயில் இருக்கும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு பட்டியிருக்கலாம் என ஸ்ரீபுர பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!