உலகம்

மத்திய காசாவில் உள்ள பள்ளியை குறிவைத்து தாக்குதல் : பலர் பலி!

மத்திய காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 100 பேர் காயமடைந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான மத்திய காசாவின் டெய்ர் அல் பலாவில் உள்ள கதீஜா பெண்கள் பள்ளியை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹமாஸ் கட்டளை மையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

துருப்புக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவும் ஆயுதக் கடையாகவும் பள்ளி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் – அது பொதுமக்களை முன்பே எச்சரித்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த பாலஸ்தீனியர்கள் அருகிலுள்ள அல் அக்ஸா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 46 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்