இலங்கை செய்தி

பாணந்துறையில் திடீரென கரைக்கு வந்த பாரிய முதலை

பாணந்துறை கடற்கரைக்கு இன்று (28) பிற்பகல் ஏறக்குறைய ஏழு அடி நீளம் கொண்ட முதலை வந்துள்ளது.

மாலை 5.30 மணியளவில் கடற்கரைக்கு அருகில் உள்ள கல் அருகே முதலை இருப்பதைக் கண்ட மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த போது முதலை கடலுக்குள் சென்றதுடன் கரையில் இருந்து சுமார் 10-20 மீற்றர் தொலைவில் சுற்றித் திரிந்தது.

முதலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் நாளை (29) மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை