மத்திய காசாவில் உள்ள அகதிகள் முகாம்களை குறிவைத்து தாக்குதல் : பலர் பலி!

கெய்ரோவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மத்திய காசாவில் உள்ள அகதிகள் முகாம்களைத் தாக்கிய மூன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nuseirat அகதிகள் முகாம் மற்றும் Bureij அகதிகள் முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
சமீபத்திய உயிரிழப்புகள் காஸாவை அழித்த போரில் நம்பிக்கையின் அரிய தருணத்தை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலால் தூண்டப்பட்ட போரால் ஏறக்குறைய 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 36 times, 1 visits today)