டிரம்ப் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்பை சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.
ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.
இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)