ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனம்
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களால், ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் வோரோனேஜ் பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, அவற்றில் ஒன்று போர் உபகரணங்களின் கிடங்கில் தீயை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 38 times, 1 visits today)





