இலங்கை செய்தி

சுவிஸில் வசிக்கும் கணவருக்கு வீடியோ கோல் எடுத்து உயிரை மாய்துக்கொண்ட மனைவி – யாழில் சம்பவம்

சுவிஸ் நாட்டில் வசிக்கும் கணவர் ‘வீடியோ கோலில்’ இருக்கும் போது மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் தனது கணவருடன் கடந்த 24ஆம் திகதி தொலைபேசியில் வீடியோ கோலில் கதைத்துக்கொண்டிருந்த வேளை கணவன் மனைவிக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அதனை அடுத்து குறித்த பெண் கணவர் வீடியோ கோலில் இருக்கும் போதே அவரது கண் முன்னே தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

அதனை அடுத்து கணவர் அயல் வீட்டிற்கு தொலைபேசி ஊடாக தகவல் தெரிவித்ததை அடுத்து , அயல் வீட்டார் அப்பெண்ணை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!