வட அமெரிக்கா

உத்தியோகபூர்வ செயல்களுக்கு டிரம்ப் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது; அமெரிக்க உச்ச நீதிமன்றம்

அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஜூலை 1ஆம் திகதி வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

அதிபர் என்ற முறையில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு மேற்கொண்ட செயல்களுக்குத் டிரம்ப் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்பு இருப்பதாகத் டிரம்ப் கூறியதைக் கீழ்நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றதை ஒப்புக்கொள்ளாமல் அதை மாற்றியமைக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.மேல்முறையீட்டிற்குச் சாதகமாக ஆறு நீதிபதிகளும் எதிர்த்து மூன்று நீதிபதிகளும் வாக்களித்தனர்.

தற்போது டிரம்ப், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அதிபர் ஜோ பைடனை எதிர்த்துக் களமிறங்கவுள்ளார்.இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு வழக்கில் வழங்கிய தீர்ப்பில், “அதிபராகப் பதவி வகிக்கையில் மேற்கொள்ளும் அதிகாரபூர்வச் செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலிருந்து, முன்னாள் அதிபர் ஒருவருக்குப் பாதுகாப்பு உண்டு என முடிவெடுத்துள்ளோம்,” என்று தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

See also  அமெரிக்காவை உலுக்கிய புயல் - அதிகரிக்கும் மரணங்கள் - வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

US Supreme Court seeks security funding to protect justices, homes | Reuters

சட்ட நடவடிக்கைகள் குறித்த அச்சமின்றியும் நியாயமான முறையிலும் ஓர் அதிபர் தமது கடமைகளை ஆற்றுவது முக்கியம் என்று தலைமை நீதிபதி கூறினார்.“ஆனால் அதிகாரபூர்வமற்ற நடவடிக்கைகள் தொடர்பில் அதிபருக்கு இத்தகைய பாதுகாப்பு கிடையாது,” என்றார் அவர்.

இந்தத் தீர்ப்பைப் புகழ்ந்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், “நமது அரசமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி இது. ஓர் அமெரிக்கர் என்பதில் பெருமையடைகிறேன்,” என்று கூறியுள்ளார்.ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்க மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்று என்றும் இது ஓர் ஆபத்தான முன்மாதிரி என்றும் அதிபர் ஜோ பைடன் சாடியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில், இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்குமுன் டிரம்ப் விசாரணையை எதிர்கொள்ளும் சாத்தியம் மிகக் குறைவு என்பதை உச்ச நீதிமன்றத்தின் முடிவு காட்டுவதாக அவர் கூறினார்.

“அமெரிக்காவில் யாரும் அரசர் இல்லை என்ற அடிப்படையில்தான் இந்த நாடு தோற்றுவிக்கப்பட்டது,” என்றார் பைடன். யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதைக் குறிப்பிட்ட அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த அடிப்படையையே மாற்றிவிட்டது என்றார்.

See also  அமெரிக்காவை தாக்கிய ஹெலேன் சூறாவளி - பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

2020ஆம் ஆண்டின் அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து 2021 ஜனவரி 6ஆம் திகதி டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் பைடன், அதன் தொடர்பில் டிரம்ப் எதிர்நோக்கும் வழக்கின் முடிவு குறித்து இந்த ஆண்டின் தேர்தலுக்குமுன் அறிந்துகொள்ளும் உரிமை அமெரிக்கர்களுக்கு உண்டு என்றார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content