செய்தி வாழ்வியல்

மரண அபாயத்தைக் குறைக்கும் Coffee – ஆய்வில் தகவல்

துடிப்பான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்காதோருக்குக் காப்பி உதவலாம் என்று ஆய்வொன்று கூறியுள்ளது.

ஒரு நாளில் குறைந்தது 6 மணி நேரம் உட்கார்ந்திருப்போரிடையே காப்பி குடிப்போரை விட காப்பி குடிக்காதோருக்கு மரண அபாயம் அதிகம் இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

காப்பி குடிக்காதவர்களுக்கு மரணமடையும் சாத்தியம் 1.6 மடங்கு அதிகம் என்று BMC Public Health சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறின.

இந்நிலையில் காப்பியின் தாக்கத்தைப் பற்றி மேலும் ஆராயவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையே நடத்தப்பட்ட தேசிய சுகாதார, ஊட்டச்சத்துக் கருத்தாய்வுகளின் முடிவுகள் ஆராயப்பட்டன.

10,639 பெரியவர்களிடம் கருத்தாய்வுகள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் மக்கள்தொகையில் 52 விழுக்காட்டினருக்குக் காப்பி அருந்தும் பழக்கம் உள்ளது.

அவர்களில் சுமார் 48 சதவீதமானோர் அன்றாடம் குறைந்தது 6 மணி நேரம் அமர்ந்திருந்திப்பதாகக் கூறினர்.

காப்பி அருந்தாமல் 23 சதவீதமானோர் குறைந்தது 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!