இலங்கை

இத்தாலியில் இலங்கையர் மீது கொலை முயற்சி! மற்றுமொரு இலங்கையர் கைது

இத்தாலியில் சக இலங்கையரை கொலை செய்ய முயன்ற மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியின் நேபிள்ஸில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதான வீடற்ற இலங்கையர் ஞாயிற்றுக்கிழமை சக இலங்கையர் ஒருவரை கத்தியால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

ஒருவர் காயமடைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சம்பவத்தில் 44 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் தாக்கப்பட்டு கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவர் பலமுறை ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதுடன் மூன்று காயங்கள் பெரியதாகவும் கடுமையானதாகவும் இருந்தன போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவரை பொலிஸார் பெல்லெக்ரினி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!