கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் சுற்றிவளைப்பு! அதிகாரிகள் அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
அவரது சூட்கேஸில் கவனமாக பொதி செய்யப்பட்ட 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)