ஸ்பெயினில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள டிர்சோ டி மோலினா ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 25 வயதுடைய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அவர் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தாரா அல்லது விடுமுறைக்கு வந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் அவருடைய உடலை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 21 times, 1 visits today)





