இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய விசா முறை!

இலங்கையில் புதிய விசா முறை இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது இயங்கி வரும் ETA முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் முறையான E விசா முறை இங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இங்கு சுற்றுலா விசாவின் கீழ் 08 வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.

வணிக விசாவின் கீழ் 04 வகையான விசாக்கள் வழங்கப்பட உள்ளன.

புதிய வீசா முறை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் அது தொடர்பான கட்டணங்கள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எச்.ஜே.இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விசா விண்ணப்பத்தின் மூலம் விரைவாக விசா வழங்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.

இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் ஈர்ப்பை பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 75 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!