பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகர் அசோகனின் மகனை பாத்து இருக்கீங்களா? அட இவர்தானா??

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஆஸ் துரை என்னும் கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றவர் அசோகன்.

வல்லவனுக்கு வல்லவன், கர்ணன், அடிமைப்பெண், அன்பே வா என இவர் வில்லனாக நடித்து வெற்றி பெற்ற படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற இவர் தன்னுடைய 52 வது வயதில் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இவர் இறந்த மூன்று வருடங்களிலேயே இவருடைய மனைவியும் இறந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு வின்சென்ட், அமல்ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இதில் அமல்ராஜ் இறந்துவிட்டார். அசோகனின் இரண்டாவது மகன் வின்சென்ட் தான் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக இருக்கிறார்.

வின்சென்ட் அசோகன் என்னும் பெயரில் தென் இந்திய சினிமாவில் வில்லனாக மிரட்டி கொண்டிருப்பவர் தான் மறைந்த நடிகர் அசோகனின் மகன்.

இவரை இன்னும் நன்றாக அடையாளப்படுத்த வேண்டும் என்றால் போக்கிரி படத்தில் குரு என்ற கேரக்டரில் நடித்தவர்தான் வின்சென்ட் அசோகன். அதுமட்டுமில்லாமல் அஜித்குமார் நடித்த ஆழ்வார் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

தொட்டி ஜெயா, வேலாயுதம், ஏய், சாணக்யா போன்ற படங்களிலும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

இப்பயும் உங்களுக்கு அவரை நினைவு வரவில்லையா? இதோ அவரது புகைப்படம்

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!