இலங்கை

முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்..

2012ஆம் ஆண்டு கிரேக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட திறைசேரிப் பத்திரங்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை அடுத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிரீஸ் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை அறிந்து அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய திறைசேரிப் பத்திரங்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1,843,267,595 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பான முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்