ஆபத்தான நிலையில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை – ஷெஹான் சேமசிங்க!
பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (23.03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக இருக்க வேண்டும், பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர், தொலைநோக்குப் பார்வை உள்ளவர் முக்கியப் பிரச்சினையாக இருக்க வேண்டும், ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை” எனக் கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





