ஆசியா செய்தி

நாட்டிற்காக இலவசமாக சேவையாற்றவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி

பாகிஸ்தானில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி தனது பதவிக்காலம் முடியும் வரை தனக்கு சம்பளம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் நிலவும் மோசமான நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவை தான் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

68 வயதான சர்தாரி பாகிஸ்தான் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக இரண்டு நாட்களுக்கு முன் பதவியேற்றார்.

அந்த வகையில் நிதி நிலையை கருத்தில் கொண்டு, நாட்டின் கருவூலத்திற்கு மேலும் சுமையை ஏற்றுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பணக்கார அரசியல் தலைவர்களில் ஒருவராக தற்போதைய ஜனாதிபதி சர்தாரி விளங்குகிறார்.

(Visited 4 times, 1 visits today)
See also  இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை இடைநிறுத்திய தேர்தல் ஆணைக்குழு!
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content