இலங்கை

06 நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அனுர : காரணம் என்ன?

தேசிய மக்கள் படையின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் 06 நாடுகளின் இராஜதந்திர அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (07.03) சந்திப்பொன்று இடம்பெற்றது.

பெலவத்தை ஜனதா விமுக்தி பெரமுன கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதில் பாலஸ்தீனம், துருக்கி, பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

அங்கு தேசிய மக்கள் படையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற நிலையில் அனுர குமார அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். இதனையடுத்து பல்வேறு நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து வருவது பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!