பல்கலைகழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்: இருவர் கைது
இன்று கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் (IUSF) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொரளை சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது
(Visited 4 times, 1 visits today)