Site icon Tamil News

ஐஸ்லாந்தில் 24மணிநேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள்… 2வது முறையாக வெடித்த எரிமலை

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக்கின் அருகே ல் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் எரிமலை வெடித்தது.

ரெய்காவிக்கில் இருந்து 20 மைல் தொலைவில் ரெய்க்ஊஏன்ஸ் தீபகற்பத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்து சிதறி, தீக்குழம்பை கக்கி வருகிறது.

ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக வெடித்த இந்த எரிமலை அந்தாட்டின் பெரிய விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள போதிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ஹே ஜப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடிப்பு காரணமாக 1,00,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

Exit mobile version