புறாக்கள் உயிரோடு எரிப்பு: நெடுந்தீவில் கொடூரம்!
இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்திவரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. பொலிஸாரைக் கண்டதும் அச்சம் காரணமாக உரிமையாளர்களால் இந்த கொடூரச் செயல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து 144 புறாக்கள் கடல் மார்க்கமாக நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. அங்கிருந்து பகுதி பகுதியாக யாழ்ப்பாணத்திற்குப் புறாக்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்தனர். நேற்று முதற்கட்டமாக 44 புறாக்களைக் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, கடற்படையினர் அவற்றை வழிமறித்து மூவரைக் கைது செய்தனர். […]













