அலெக்ஸி நவல்னியின் மரணத்தில் திருப்பம் – தவளைகளில் இருந்து பெறப்பட்ட கொடிய விஷம்!
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) டார்ட் தவளைகளில் காணப்பட்ட கொடிய நச்சுப் பொருளைக் உட்கொண்டு சிறையில் உயிரிழந்திருக்கலாம் என இங்கிலாந்து மற்றும் பிற நட்பு நாடுகள் கூறியுள்ளன. நவால்னி எவ்வாறு இறந்தார் என்பதை நிறுவ ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முனிச்சில் இன்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் நவல்னியின் மனைவியான யூலியா நவல்னி செய்தியாளர்கள் முன் இதனை தெரிவித்துள்ளார். […]













