இலங்கை: கைது செய்யும்போது பொலிஸ் உத்தியோகத்தரின் காது மடலைக் கடித்த கொள்ளையன்
அனுராதபுரம் புனித பிரதேசத்தில் யாத்திரிகர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் சந்தேகநபரை கைது செய்யும் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காது மடலின் ஒரு பகுதியை கொள்ளையன் கடித்துள்ளார். காயமடைந்த அதிகாரி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடமலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) ருவன்வெலிசேயவில் இருந்து ஸ்ரீ மஹா போதி வரையான பாதைக்கு அருகில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது சந்தேக நபர் நீர் தேக்க தொட்டிக்கு அருகில் நடமாடுவதாக […]













