உலகம்

காற்று கொந்தளிப்பால் நடுவானில் குலுங்கிய கட்டார் ஏர்வேஸ் ;12 பேர் காயம்

  • May 27, 2024
  • 0 Comments

கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (26) குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளனர். கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான QR017 என்ற விமானம் ஒன்று தோஹா நகரில் இருந்து டப்ளின் நகருக்கு விமானம் துருக்கி நாட்டின் ஊடாக பயணித்த போது குலுங்கியதாக டப்ளின் விமான நிலையம் தெரிவித்துள்ளது.இருப்பினும், டப்ளின் நகரில் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். தொடர்ந்து […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய காலநிலை – குழந்தைகள் உட்பட 15 பேர் பலி

  • May 27, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் பல மாநிலங்களை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய நகரங்கள் கடுமையான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் காயமடைந்த பலர் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டல்லாஸின் வடக்கே இருந்து ஆர்கன்சாஸின் வடமேற்கு மூலை வரையிலான பகுதியில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்திய புயலுக்கு முன்னதாக மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டனர். அமெரிக்காவை பாதித்துள்ள இந்த […]

உலகம் செய்தி

உலகின் 119 நாடுகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பு – இலங்கைக்கு கிடைத்த இடம்

  • May 27, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டிற்கான சுற்றுலா மற்றும் பயண அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 76வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தால் தயாரிக்கப்பட்ட இந்தக் குறியீடு 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை 75 ஆவது இடத்தில் இருந்ததோடு நான்கு வருடங்களின் பின்னர் இலங்கை ஒரு இடம் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை 3.69 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 2019 இல் இலங்கை பெற்ற அதே புள்ளிகள் இதுவாகும் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த குறியீட்டு தயாரிப்பில், உலகின் 119 […]

இந்தியா

அம்பானி மகனுக்கு கிடைக்கவுள்ள 80 மில்லியன் டொலர் திருமண பரிசு

  • May 27, 2024
  • 0 Comments

இந்திய அதிபரான முகேஷ் அம்பானி தனது மகனின் திருமண விழாவில் டுபாயில் 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சொகுசு மாளிகையை வழங்கப் போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. வழங்கப்படவுள்ள இந்த மாளிகையானது மூவாயிரம் சதுர அடி மற்றும் 10 அறைகள் கொண்ட மிக ஆடம்பரமான மாளிகை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 மில்லியன் டொலர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த வீட்டு ஒப்பந்தம் டுபாயில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பெரிய காணி கொள்வனவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]

இலங்கை

காசாவை உலுக்கிய இஸ்ரேலின் தாக்குதல் – 35 பேர் பலி

  • May 27, 2024
  • 0 Comments

காசா பகுதியின் ரபா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் விடாஸ் தெரிவித்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்கை நோக்கி வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆனால், தெற்கு காஸா நகரமான ரபாவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் கூறுகிறது. இருப்பினும், “துல்லியமான ஆயுதங்கள் மற்றும் […]

பொழுதுபோக்கு

ஆல்யா மானசாவுக்கு பிறந்தநாள்… எத்தன வயசாச்சினு தெரியுமா?

  • May 27, 2024
  • 0 Comments

தமிழ் சின்னத்திரையில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இருவரும் ராஜா ராணி தொடர் மூலம் இணைய இப்போது நிஜ வாழ்க்கையில் இணைய இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் சஞ்சீவும், ஆல்யா மானசா இனியா என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சஞ்சீவ். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு தனது […]

இலங்கை

இலங்கையில் 9 பேரின் உயிரை பறித்த காலநிலை – தொடரும் சீரற்ற காலநிலை

  • May 27, 2024
  • 0 Comments

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காசல்ரீ, மவுஸ்ஸாகலை மற்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென் க்ளேயர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

சிங்கப்பூரில் இணையக் குற்றங்களை தடுப்பதற்காக அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

  • May 27, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் பொலிஸார் இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கமைய, தேசியச் சேவையில் புதிய வேலையை அறிமுகம் செய்யவிருக்கிறது. இவ்வாண்டுப் பிற்பகுதியில் நடப்புக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது. மிரட்டல்களை அடையாளம் காண்பது, மோசடிகளைத் தடுப்பது போன்ற பணிகளைத் தேசியச் சேவையாளர்கள் மேற்கொள்வர். இவ்வாண்டின் பொலிஸ் பிரிவு வேலைத்திட்டக் கருத்தரங்கில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) இதனை அறிவித்தார். அந்தப் பணியில் ஈடுபடுவோர் சேவைக்காலம் முடிந்த பிறகு மின்னிலக்கப் பொருளாதாரத்தில் உள்ள வாய்ப்புகளைப் […]

செய்தி வாழ்வியல்

தினமும் தலைக்கு குளிக்கலாமா? ஏற்படும் பிரச்சினை தொடர்பில் வெளியான தகவல்

  • May 27, 2024
  • 0 Comments

நம்மை நாம் எப்படி பராமறித்துக்கொள்கிறோம் என்பதை, நாம் முடியை எப்படி பார்த்துக்கொள்கிறோம் என்பதை வைத்து சொல்லி விடலாம். ஒரு சிலர், தங்கள் முடிக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று யோசித்து, ஹேர் கேர் செய்வதாக யோசித்து அவர்களுக்கே தெரியாமல் பல சமயங்களில் முடியை கெடுத்துக்கொள்வர். இன்னும் சிலர், தங்கள் முடியை சுத்தமாக பராமறிக்காமல், பெரும்பாலான முடியை இழந்தவுடன் மருத்துவரை அணுகுவர். இது இரண்டுமே ஏதாவது ஒரு வகையில் நம்மை முடியை இழக்க செய்து விடும், என்று கூறுகின்றனர் […]

செய்தி

இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

  • May 27, 2024
  • 0 Comments

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையவழி நுழைவு நிறுத்தப்படும் என்றும், விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி எக்காரணம் கொண்டும் […]

error: Content is protected !!